;
Athirady Tamil News

6 முதல் 12 வயதினருக்கு இன்று முதல் கோவேக்சின் தடுப்பூசி..!!

0

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது.

இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு செலுத்த துறை ரீதியான நிபுணர் குழு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது.

இந்த நிலையில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது.

இதையடுத்து, இன்று முதல் 6- 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.