;
Athirady Tamil News

’டொலர்களை சம்பாதிக்க பல்வேறு வழிகள் உள்ளன’ !!

0

தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதின் ஊடாக, அதிக டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

“வகுப்பறைகளுக்கான கணினி தொழில்நுட்ப பலகைகள்” எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் ஒரு நிகழ்வு அவிஸ்ஸாவலையில் நேற்று (3) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனைக் குறிப்பிட்டார்.

டொலர்களை சம்பாதிக்க பல்வேறு சிறந்த வழிகள் உள்ளன எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று அரசாங்க நிதி பின்புலம் வெற்றாக உள்ளதாகவும்,இன்று வக்குரோத்தான அரசும், வக்குரோத்தான நாடுமே உள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் வங்குரோத்து நிலையில் இருந்தாலும் எதிர்க்கட்சி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.