;
Athirady Tamil News

சென்னை மாநகராட்சி மன்ற அ.தி.மு.க. குழு நிர்வாகிகள் நியமனம்..!!

0

பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கழக குழு நிர்வாகிகள் தலைவராக சதீஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சி கழக குழு நிர்வாகிகள் நியமனம் பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்தின், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக குழு நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற கழக குழு நிர்வாகிகள் தலைவர் சதீஷ் குமார், (182-வது வார்டு மாமன்ற உறுப்பினர்) துணைத் தலைவர்கள் ஜான், (84-வது வார்டு மாமன்ற உறுப்பினர்) சத்தியநாதன் (145-வது வார்டு மாமன்ற உறுப்பினர்) செயலாளர் கார்த்திக், (7-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்) கொறடா கதிர்முருகன், (170-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ) பொருளாளர் சேட்டு (24-வது வார்டு மாமன்ற உறுப்பினர்). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.