;
Athirady Tamil News

’நாட்டின் நலனை அடிப்படையாக கொள்ளவேண்டும்’ !!

0

நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டே திட்டங்களை வகுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் வளர்ச்சி தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அரசியல்வாதிகளின் நலனை அடிப்படையாக கொண்டு திட்டங்கள் வகுக்கப்படுவதை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

மக்களுக்கு சாதகமாக அமையாத எந்தவொரு விடயமும் நாட்டிற்கும் நன்மையை பெற்றுத்தராது என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட எந்தவொரு நன்மையற்ற விடயங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்காலத்தில் அடியொற்றாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.