;
Athirady Tamil News

21ஐ ஜூலைக்குள் நிறைவேற்ற வேண்டும் !!

0

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஜூலை மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென்று தெரிவித்த பாரளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் அதிருப்திக்கு இலங்கை ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இந்த திருத்தம் நிறைவேற்றப்படுவதை தான் விரும்பவில்லை என தெரிவித்த அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சில அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

உத்தேச திருத்தங்கள் எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஜூலை மாதத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை ஒத்திவைப்பதன் மூலம் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி மோசமடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.