;
Athirady Tamil News

இலங்கை குறித்து சீன- அமெரிக்க தூதுவர்கள் கலந்துரையாடல்!!

0

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் ஆகியோருக்கு இடையில் நேற்று (13) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

கொழும்பில் அமைந்துள்ள சீன தூதரகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது இலங்கையின் நிகழ்கால பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்பும் ஒன்றிணைந்து எவ்வாறு ஒத்துழைப்புக்களை வழங்குவது என்பது குறித்தும், வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக இரு நாடுகளில் தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.