;
Athirady Tamil News

ஐஸ் கொடுத்த மாணவன் கைது !!!

0

கந்தானை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்விப்பயிலும் 15 வயதான மாணவனுக்கு தனியார் வகுப்பில் வைத்து ஐஸ் போதைப்பொருளை விற்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், மற்றுமொரு மாணவனை கந்தானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விருவரும் சர்வதேச பாசாலையில் கல்விப்பயிலுகின்றனர் என விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது.

கந்தானை தெற்கு பட்டகம பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு அண்மையில் வைத்து, போதைப்பொருள் விற்பனைச் செய்யப்படுவதாக கிடைத்த தகவல்களை அடுத்தே, மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருளை விற்பனைச் செய்த மாணவனுக்கு, அந்தப் ​போதைப்பொருளை கொடுத்தவர் யாரென்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.