;
Athirady Tamil News

முன்னணி சோசலிஸ கட்சி அலுவலகத்துக்குள் புகுந்த பொலிஸார் !!

0

நுகேகொடை- மெல்டர் வீதியிலுள்ள முன்னணி சோசலிஸ கட்சி அலுவலகத்துக்குள் இன்று மாலை பொலிஸ் குழுவொன்று நுழைந்ததாக அக்கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஒருவரை தேடி வந்ததாகத் தெரிவித்தே கட்சி அலுவலகத்துக்குள் புகுந்ததாகவும் எனினும் அங்கிருந்தவர்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் பொலிஸார் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மிரிஹான விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவு மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் ஜீப் ஒன்றுடன் இரண்டு மோட்டார் சைக்கிளில்களிலும் பொலிஸ் குழு தமது கட்சி அலுவலகத்துக்கு வருகைத் தந்ததாக தெரிவித்தார்.

எனினும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் யார் என விசாரித்த போது, பொலிஸார் அதனை கூற மறுத்த்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.