;
Athirady Tamil News

வவுனியா ஓமந்தை எரிபொருள் நிலையத்தில் முரண்பாடு!! (படங்கள்)

0

ஓமந்தை எரிபொருள் நிலையத்தில் மின்சார சபை உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாவிற்கு பெற்றோல் நிரப்புமாறு கோரிய போது எரிபொருள் நிலைய உரிமையாளர் மறுப்புத் தெரிவித்ததன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிலையத்தின் உரிமையாளர் 2500 ரூபாவிற்கு எரிபொருள் வழங்க முன்வந்தபோது அதனை ஏற்றுக்கொள்ள மின்சார சபை உத்தியோகத்தர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.
இதன் காரணமாக இருதாப்பினருக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டது.

அவசர மின்சாரத்தடையை நிவர்த்தி செய்வதற்கு செல்வதற்கே எரிபொருள் பெற்றுக்கொள்ள மின்சார சபை ஊழியர்கள் முடியன்றபோது முரண்பாடு ஏற்பட்டுள்ளது .
பின்னர் பொலிசார் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதேவேளை புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு பகுதி மின்சார சபை உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.