;
Athirady Tamil News

தொல்பொருள் அதிகாரிகளும் பார்வையிட்டனர் !!

0

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சிலர், இன்று ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு காணப்படும் தொல்பொருள் ரீதியான பொருள்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதற்காகவே குறித்த அதிகாரிகள் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருக்கும் இளைஞர்களுடன் உரையாட திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பலர் வந்து செல்லும் நிலையில், அங்குள்ள பெறுமதியான பொருள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சில பெறுமதியானப் பொருள்கள் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.