;
Athirady Tamil News

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்!!

0

நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட கடன் வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு உரிமம் பெற்ற வங்கிகளிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, அந்தந்த நபர்களின் எதிர்கால கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் வணிகம்/திட்டங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

தற்போதுள்ள பெரும் பொருளாதார சவால்கள் மற்றும் மேலதிக நிவாரணம் வழங்குமாறு அரச நிறுவனங்கள் உட்பட பல தரப்பினர்களின் கோரிக்கைகள், அதாவது சுற்றுலாத் துறை மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானங்களை கருத்தில் கொண்டு மத்திய வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.