;
Athirady Tamil News

உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கி 14 பேர் பலி..!!

0

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் பாண்டா, பதேபூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 14 பேர் இறந்து விட்டனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர். பாண்டா மாவட்டத்தில் 4 பேர், பதேபூர் 2 பேர், பல்ராம்பூர், புலந்த்சாகர், ரே பரேலி, அமேதி, கவுஷாம்பி, சுல்தான்பூர் மற்றும் சித்ரகூட் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 14 பேர் பலியாகினர். மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.