;
Athirady Tamil News

கப்ராலுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீடிப்பு !!

0

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வெளிநாட்டு தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அதன் காரணமாக அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரி முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவினால் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே அவருக்கு எதிர்வரும் அக்டோபர் 26ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.