;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் நாளை மின்வெட்டு!!

0

நாளைய தினம் (26) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.

மேலும் கொழும்பு முன்னுரிமை வலயங்களில் (CC) காலை 6 மணி முதல் 8.30 மணி வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலம் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

M,N,O,X,Y,Z ஆகிய வலங்களுக்கு காலை 5.30 மணிமுதல் 8.30 வரையான காலப்பகுதியில் மின்வெட்டு துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.