;
Athirady Tamil News

எரிபொருள் பெற பொலிஸ் நிலையத்தில் பதியவும் !!

0

தமது பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு முச்சக்கரவண்டி சாரதிகளிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு டுவிட்டரில் பதிவொன்றை இட்டு அவர் இன்று (26) தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விவசாய உபகரணங்கள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பயன்படுத்துபவர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

வாராந்த எரிபொருள் தேவை தொடர்பான தகவல்களுடன் அவர்கள் பதிவு செய்து கொள்வதுடன், அப்பகுதியில் உள்ள ஏதாவதொரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.

இதேவேளை, QR முறைமையை செஸி எனப்படும் அடிச்சட்ட இலக்கம்மூலம் பதிவு செய்ய முடியாதவர்கள், வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.