;
Athirady Tamil News

10 கிலோ கஞ்சா, புகையிலை பறிமுதல்..!!

0

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிவசெந்தில்குமார் தலைமையில் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பால முருகன், ராமன்,கண்ணன், சங்கர் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.

அப்போது பொதுப்பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடைந்தது. அந்த பையை சோதனை செய்தபோது பண்டல்களில் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் அதே பெட்டியில் லக்கேஜ் வைக்கப்பட்ட இடத்தில் மற்றொரு பேக் கிடந்தது.அதை பார்த்த போது தடைசெய்யப்பட்ட 5 கிலோ புகையிலை இருந்தது. இதையடுத்து அதை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அந்த பை யாருடையது? கஞ்சா மற்றும் புகையிலை கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.