;
Athirady Tamil News

விமானத்தில் பிறந்த குழந்தை; டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

0

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்திற்கு வந்து சேர்ந்த விமானம் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு பயணத்திலேயே குழந்தை பிறந்து உள்ளது. இதனை தொடர்ந்து விமான நிலையம் வந்து சேர்ந்ததும் வளாகத்தில் உள்ள மேதாந்தா மருத்துவ மையத்தில் தாய் மற்றும் சேய் இருவரும் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நலமுடன் உள்ளனர். இதுபற்றி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டுவிட்டரில், பிறந்த குழந்தையின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், முதல் இளம் பயணியை வரவேற்கிறோம். முனையம் 3-ல் மேதாந்தா மருத்துவ மையத்திற்கு முதல் குழந்தை வந்து சேர்ந்த நிகழ்வை கொண்டாடுகிறோம். இருவரும் நன்றாக உள்ளனர் என பதிவிட்டு உள்ளனர். அவசரகால மருத்துவ சிகிச்சைக்காக முனையம் 3-ல் அனைத்து நேரங்களிலும் நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். டெல்லி விமான நிலைய முனையங்களில் மேதாந்தா அவசரகால சிகிச்சை மையமும் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.