;
Athirady Tamil News

தெல்லிப்பழையில் மீண்டும் கூடியளவு மழைவீழ்ச்சி பதிவு!!

0

நேற்று முன்தினம் திங்கட்கிழமை (14.11.2022) காலை-8.30 மணி முதல் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(15.11.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் கூடியளவு மழை வீழ்ச்சியாக 96.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

மேற்படி காலப் பகுதியில் யாழ்.அச்செழுவில் 75.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்துறையில் 37.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வடமராட்சி அம்பனில் 29.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.கோட்டையில் 23.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.நகரத்தில் 22.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 21.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், சாவகச்சேரியில் 20.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 20 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த மாத இறுதியிலும், கடந்த வார இறுதியிலும் யாழ்.மாவட்டத்திலேயே தெல்லிப்பழையிலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.