;
Athirady Tamil News

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மறியலில்!!

0

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , மேலதிக சட்டநடவடிக்கைகாக கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைகளத்தினர் ஊடாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை அடுத்து மீனவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.