;
Athirady Tamil News

நயினை இளைஞர்கள் உட்பட 51 பேர் குருதிக்கொடை!! (படங்கள்)

0

நயினாதீவு மத்திய விளையாட்டுக் கழகத்தினால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது.

மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த இரத்த தான முகாமானது கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான திரு.ஜெகநாதன் குடும்பத்தினரின் அனுசரணையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு குறித்த பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட 51 குருதிக்கொடையாளர்கள் உயிர்காக்கும் இந்த உன்னத பணியில் பங்குகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.