;
Athirady Tamil News

சுழிபுரத்தில் பாண் விற்பனையாளர் மீது தாக்குதல் ; வாகனமும் உடைப்பு!!

0

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று பாண் விற்பனையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு , அவர் பாண் விற்க பயன்படுத்தும் வாகனத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

மாதகல் பகுதியில் உள்ள வெதுப்பகத்தின் உற்பத்தி பொருட்களை , காட்டுப்புலம் பகுதிக்கு விற்பனைக்கு எடுத்து சென்ற போது முகங்களை மூடி துணிகளை கட்டியவாறு மூன்று பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியான விற்பனையாளர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வாகனத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.