;
Athirady Tamil News

ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் தோழர் இரட்ணசபாபதியின் 17 ஆவது நினைவேந்தல்!! (படங்கள், வீடியோ)

0

ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் தோழர் இரட்ணசபாபதியின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு வம்மியடிப் பிள்ளையார் ஆலய ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை(12) மாலை இடம்பெற்றது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் தோழர் இரா.ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மறைந்த தோழர் இரட்ணசபாபதியின் தாயார் தெய்வானை அம்மாள் சுடர் ஏற்றி வைக்க, வரவேற்புரையினை கிழக்கு மாகாணச் செயலாளர் தோழர் சுந்தர் நிகழ்த்தினார்.
இவ் நினைவேந்தல் நிகழ்வில், ஈரோஸ் ஜனநாயக முன்னணி பொதுச் செயலாளர் தோழர் இரா.ஜீவன், ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆய்வாளர் பேராசிரியர் பால.சுகுமார், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தோழர் புஸ்பராசா, ஈரோஸ் ஒருங்கிணைப்புச் செயலாளர் தோழர் திருச்செல்வம் மற்றும் அரசியல் சமூக ஆய்வாளரும், புரட்சிகர ஜனநாயக இயக்கத்தின் முன்னணிச் செயற்பாட்டாளருமான ஆகவே ஜபார் உட்பட முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இங்கு வருகை தந்தோரால் நினைவுப்பேருரைகளும் இடம் பெற்றன.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.