;
Athirady Tamil News

அடுத்த ஆண்டு மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!

0

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், 2023-2024 ம் ஆண்டு நடைபெற உள்ள பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் கட்ட அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்றும், 26-ம் தேதி தேர்வு நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதம் 6, 8, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூட் தேர்வு மே மாதம் 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.