;
Athirady Tamil News

யாழப்பாணம் – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி!! (படங்கள்)

0

யாழப்பாணம் – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் சிவலிங்கம் சதீஷ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 270 மாணவர்களுக்கு அரிசிப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.

10 கிலோ எடை உள்ள அரிசி பொதிகளை இதன் போது மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.