;
Athirady Tamil News

கரையோதுங்கிய தமிழக மீனவர்கள்!! (PHOTOS)

0

தமிழக மீனவர்கள் படகின் இயந்திர கோளாறு காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் கரையோதுங்கியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டையை சேர்ந்த 4 மீனவர்களே பைபர் படகில் கரையொதுங்கியுள்ளனர்

கரையோதுங்கிய மீனவர்களிடம் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது,

நேற்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடிக்க வலைகளை விரித்து இருந்த வேளை தமது வலைகளை இலங்கை மீனவர்கள் சிலர் அறுத்து எடுத்துச் சென்றனர். அவர்களை துரத்தி வந்த வேளையே தமது படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தாம் வல்வெட்டித்துறை பகுதியில் கரையொதுங்கினோம் என தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் 4 மீனவர்களையும் பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.