;
Athirady Tamil News

கொரோனா குறித்து உண்மையை சொல்லுங்க… சீனாவுக்கு உலக சுகாதார மையம் வேண்டுகோள்!!

0

சீனாவில் கொரோனா பாதிப்பு குறித்த உறுதியான தகவல் வெளியாக வில்லை. எனவே உண்மையான தகவலை தெரிவிக்கும்படி உலக சுகாதார மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதற்கிடையே ஷாங்காய் நகரில் உள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மூத்த டாக்டர் தெரிவித்து உள்ளார்.

இதன்படி பார்க்கும்போது ஷாங்காய் நகரில் மட்டும் 2.50 கோடி பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. பெய்ஜிங், தியான்ஜின், சோங்கிங், குவாங்சூ நகரங்களிலும் தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சீனாவுக்கு இலவச கொரோனா மருந்து வழங்க ஐரோப்பிய யூனியன் சம்மதம் தெரிவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.