;
Athirady Tamil News

அன்பழகன் நூற்றாண்டு விழா- அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!

0

சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.

கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளரும் சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் என் (பகுதி செயலாளர், 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன்) தலைமையில் வடக்கு பகுதி செயலாளர், 129-வது வார்டு கவுன்சிலர் மு.ராசா முன்னிலையில் நடந்த பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இந்நிகழ்வில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., சகோதரர் ஏ.எம்.வி..பிரபாகர் ராஜா, கணக்கு நிலைகுழு தலைவர் அண்ணன் க.தனசேகரன், மாநில வர்த்தகரணி செயலாளர் அண்ணன் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பங்கேற்ற நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணன் பிஎஸ்.முருகேசன், அண்ணன் ST.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், பகுதி நிர்வாகிகள் எஸ்.உமாபதி, அஜந்தாரவி, பெ.தியாகு, கனிமொழிதனசேகரன், அ.பாபு, ரஞ்சித்குமார், ஆர்.சசிகுமார், வட்ட செயலாளர்கள் சோ.செந்தில்குமார், மு.அன்பழகன், பூக்கடை ஆர்.பழனிச்சாமி, பிகே.குமார், சதீஷ்கண்ணன் வடக்கு வட்ட செயலாளர்கள் மு.கோவிந்தராஜ், மைக்கேல், விஏ.ராஜா, பழக்கடை பாஸ்கர், தஞ்சை பாபு, ஆர்.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.