;
Athirady Tamil News

அமெரிக்க படையிடம் சிக்காமல் தப்பிய ஈரான் கச்சா எண்ணெய்க் கப்பல்: பல ஆயிரம் கி.மீ. தொலைவு ரகசிய பயணம்

0

ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்களிடம் சிக்காமல் ஈரான் கச்சா எண்ணெய்க் கப்பல் ஒன்று பல ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவுக்குப் பயணித்து தப்பி வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்திவைத்த போதிலும், ஹோா்முஸ் நீரிணையை அந்நாடு மூடிவிட்டதற்குப் பதிலடியாக துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது. ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்து பொருளாதார ரீதியில் அந்த நாட்டுக்கு நெருக்கடி அளிக்க இந்த வழிமுறையை அமெரிக்கா கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க கடற்படை கப்பல்களிடம் சிக்காமல் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்க் கப்பல் ஒன்று கடல் வழியே தப்பி வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

220 மில்லியன் டாலா் மதிப்பிலான 16 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ஏற்றிக் கொண்டு அந்தக் கப்பல் பயணத்தை தொடங்கியதாகவும், அமெரிக்க கடற்படை கப்பல்களிடம் சிக்காமல் இலங்கை கடற்பகுதி வழியே வந்து, தற்போது இந்தோனேசியா கடற்பகுதியைக் கடந்து சென்று கொண்டிருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் கப்பல் எந்த நாட்டுக்குச் செல்கிறது என்ற தகவல் இல்லை. எனினும் அமெரிக்க கடற்படை கப்பல்களிடம் சிக்காமல் அந்தக் கப்பல் தப்பித்து பல ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவு பயணித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.