;
Athirady Tamil News

கார் மீது லாரி மோதி விபத்து கேரள உள்துறை செயலாளர் படுகாயம்!!

0

கேரள உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருப்பவர் வேணு. இவரது மனைவி சாரதா முரளிதரனும் ஐஏஎஸ் அதிகாரி. இவர் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவர்களும், மகன் சபரி, குடும்ப நண்பர்கள் உள்பட 7 பேர் கொச்சியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது.

இதில் காரில் இருந்த ஐஏஎஸ் தம்பதி உள்பட 7 பேரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி வேணுவின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.