;
Athirady Tamil News

மின்வெட்டு காலம் அதிகரிக்கப்பட்டது !

0

2 நாட்களாக மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் நேற்று முதல் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு முன் அமுலில் இருந்த 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு, தற்போது மேலும் 10 நிமிடங்களால் அதிகரிக்கப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

மின்வெட்டு குறித்து ஆலோசிக்க நேற்று சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.