;
Athirady Tamil News

காளி கோவில் மற்றும் வாகன திருத்து நிலையத்தில் கொள்ளை!!

0

யாழ். சாவகச்சேரி காளி கோவில் மற்றும் அதனோடு அமைந்துள்ள வாகன திருத்து நிலையம் ஆகியன இன்று அதிகாலை 2 மணி அளவில் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதன் போது கடவுளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரைப் பவுண் தங்க ஆபரணங்களும், உண்டியலில் இருந்த 35,000 ரூபா பணமும், ஆலயத்தில் இருந்த அரிசி மூடைகள் மூன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதேவேளை வாகன திரித்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 450,000 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது .

குறித்த ஆலயத்தில் இடம் பெற்று வந்த வருடாந்த மாகோற்சபம் நேற்றைய தினம் நிறைவடைந்த நிலையிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.