;
Athirady Tamil News

அதிகரிக்கப்படவுள்ள ஓய்வு ஊதியம் – ஜேர்மனிய மக்களுக்கு ஓர் மகிழ்ச்சித் தகவல் !!

0

ஜெர்மனியில் எதிர்வரும் காலங்களில் ஓய்வு ஊதியம் பெறுகின்ற தொகையை அதிகரிப்பதற்காக புதிய ஒரு திட்டத்தை ஜெர்மனி அரசாங்கம் ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பியுக ரெண்ட் என்று சொல்லப்படுகின்ற பிரஜைகளுக்கான ஓய்வுதிய திட்டத்தை எதிர்வரும் 19ஆம் திகதி ஆராயவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில்,ஜெர்மனி அரசாங்கம், எதிர்காலத்தில் ஓய்வுதியம் பெறுபவர்கள் மேலதிகமான தொகையை பெறுவதற்கு ஊக்குவிப்பதற்கான அதி உயர் தொகையாக 290 யூரோ வழங்க உத்தேசித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை சூழாகும் என்று சொல்லப்படுகின்ற மேலதிக கொடுப்பனவாக, ஆகக்கூடியது 146 யூரோ அரசாங்கத்தால் வழங்கப்பட உத்தேசித்து உள்ளதாகவும் இது பற்றி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே அரசாங்கத்தில் ஊக்குவிப்பு திட்டம் நடைமுறையில் இருக்கும் வேளையில் இவ்வாறான புதிய ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு இருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.