;
Athirady Tamil News

பிரதமர் மோடியால் உக்ரைன் போரை நிறுத்த முடியும்: அமெரிக்கா பரபரப்பு கருத்து!!

0

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி ஓராண்டு முடியப்போகிறது. போர் தொடங்கியபோது, ஒரு வார காலத்துக்கு மேல் நீடிக்காது என்றுதான் உலக நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் ரஷியாவை உக்ரைன் இன்னும் உக்கிரத்துடன் எதிர்த்து போர் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளை செய்து வருகின்றன. இந்தப்போர் உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது. பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், “உக்ரைன் போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடிக்கு இன்னும் நேரம் இருக்கிறதா அல்லது ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சமாதானப்படுத்த இன்னும் நேரம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜான் கிர்பி பதில் அளிக்கையில் கூறியதாவது:- உக்ரைன் போரை நிறுத்துவதற்கு இன்னும் ரஷிய அதிபர் புதினுக்கு நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இன்னும் அதற்கு நேரம் உள்ளது என்று கருதுகிறேன். பிரதமர் மோடியால் (ரஷிய அதிபர் புதினை) சமாதானப்படுத்த முடியும். என்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாரோ அதைப் பிரதமர் மோடி பேசட்டும். நாங்கள் போர் இன்று முடிவுக்கு வர முடியும் என கருதுகிறோம். அது முடிவுக்கு வரவேண்டும். உக்ரைன் போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.