;
Athirady Tamil News

துருக்கியில் நிலநடுக்கத்தில் இருந்து உயிர்தப்பி கடும் குளிரில் தவிப்பவர்களுக்கு சொகுசு கேரவன்களை வழங்கிய கத்தார்..!!

0

துருக்கியில் நிலநடுக்கத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கடும் குளிரில் வாடும் மக்களுக்கேன கேரவன்களை கத்தார் வழங்கி இருக்கிறது. துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை பகுதிகளை உருகுலைத்த பயங்கர நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தில் உயிர்தப்பி வீடுகளை இழந்த பலரும் சாலைகளில் தங்கியிருக்கும் சூழலில் கடும் குளிரை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் சிரியாவில் மீட்கப்பட்டவர்களுக்கேன காலியான இடத்தில் வரிசையாக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பள்ளிகள், மருத்துவமனைகள் தற்காலிகமாக இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளை போல் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள கத்தார் சமீபத்தில் நடந்த உலக கால்பந்து போட்டியில் விருந்தினர்களுக்கு என அமைக்கப்பட்டு இருந்த சொகுசு கேரவன்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. முதல் கட்டமாக 350 கேரவன்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 10,000 மொபைல் வீடுகளை வழங்குவதாகவும் கத்தார் உறுதியளித்திருக்கிறது. இதனிடையே துருக்கி, சிரியாவில் இன்னும் பல இடங்களில் இடிபாடுகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், பலி எண்ணிக்கை 50,000-யும் தாண்டும் என்ற அச்சம் நிலவுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.