;
Athirady Tamil News

தேஷபந்து விவகாரம்: நீதிமன்றின் உத்தரவு !!

0

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

மேலும், அவருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

தமக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணையை சவாலுக்கு உட்படுத்தி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்களால் 1 ஒருகோடியே 78 இலட்சம் ரூபாய் பணம் மீட்கப்பட்டமை குறித்து .நாளையதினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.