அமெரிக்காவில் 73 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் – அதிபர் பைடன் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!
அமெரிக்காவில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 73 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாண்டில், 48 நாட்களில் 73 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளதுடன், துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தங்கள் அவசியம் என ஜோ பைடன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நேற்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் இறுதியாக நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.