;
Athirady Tamil News

ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வழக்கு ஜூன் 14க்கு ஒத்திவைப்பு!!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட 18 பேர் தொடர்பான தொடர்பான வழக்கு ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 11ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் 18 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அன்றிரவே 18 பேரையும் பிணையில் விடுத்து யாழ்ப்பாண மேலநிக நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேர் பிணை!! (PHOTOS)

ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டோரை மனித உரிமை ஆணைக்குழு சந்திப்பு!!

கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரும் உடன் விடுதலையாக வேண்டும்..! இல்லையேல் போராட்டம் தொடரும் – வேலன் சுவாமிகள்!!

யாழில் பதற்றம்: எம்.பி உட்பட எழுவர் கைது!! (வீடியோ, படங்கள்)

சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.