;
Athirady Tamil News

கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரும் உடன் விடுதலையாக வேண்டும்..! இல்லையேல் போராட்டம் தொடரும் – வேலன் சுவாமிகள்!!

0

வேலன் சுவாமிகள்

யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், இன்று கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யாவிட்டால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் எம்.கே சிவாஜிலிங்கம், அதிபர் துணிவற்றவர். இப்பாதையால் நடந்து சென்று சந்திக்க கூட எமக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

காவல்துறையினர் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமிழிலும் உரையாடவில்லை. சிங்களத்தில் பேசி இனவாதத்தை ஏற்படுத்துகின்றனர் என்றார்.

காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் பல மணி நேரம் முறுகல் நிலை ஏற்பட்டது.

காவல்துறையினரை பலவாறாக வார்த்தை பிரயோகங்களால் சிவாஜிலிங்கம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதே போல் காவல்துறையினரும் பல கருத்துக்களை ஆக்ரோஷமாக வெளியிட்டனர்.

யாழில் பதற்றம்: எம்.பி உட்பட எழுவர் கைது!! (வீடியோ, படங்கள்)

சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.