;
Athirady Tamil News

ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா? கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம்!! (PHOTOS)

0

யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டபம் வடமாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை(28) காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

ஆளுநர் என்ற எழும்புத்துண்டுக்காக தமிழினத்தை விற்காதே, ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.