;
Athirady Tamil News

ஜப்பானில் இன்று 6.1ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் !!

0

ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று (28.03.2023) நண்பகல் 2.48 மணியளவில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்படுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும், இந்த நிலநடுக்கம் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை எனவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.