;
Athirady Tamil News

நல்லூர் பிரதேச சபையில் குழப்பம்!!

0

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இடம்பெற்ற கேள்வி கோரலின் போது குழப்பம் ஏற்பட்டதை அடுத்து , பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

நல்லூர் பிரதேச சபையினரால் , பாவிக்கப்பட்ட பொருட்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. அதன் போது ஏலம் எடுக்க வந்த சிலர் பிரதேச சபையினருடன் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு , பொலிஸார் அங்கு சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.