;
Athirady Tamil News

ஊர்காவற்துறையில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு முயற்சி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக கை விடப்பட்டது.

தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமை நிரந்தமாக அமைக்க நாரந்தனை வடக்கு ஜே/56 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள காணியை சுவீகரிக்க காணியை அளவீடு செய்யும் பணி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நில அளவையாளர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டம் நடத்தினர்.

காணியை அளவீடு செய்ய வருகை தந்த நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.