;
Athirady Tamil News

நாளை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!!

0

நாளை உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் நாளை பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் போதுமானதாக இல்லை என்றால், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலினை கருத்திற் கொண்டு பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.