;
Athirady Tamil News

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த விருந்தினர் விடுதி!! (PHOTOS)

0

யாழ் – கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதி எவருமற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து யாழ் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மின்னொழுக்கே குறித்த விபத்திற்கு காரணமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சுமார் எட்டு லட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.