;
Athirady Tamil News

தாதியின் பால் தேநீரில் மயங்கிய மருத்துவர் !!

0

தாதி ஒருவர் வழங்கிய பால் தேநீரை அருந்தியதாகக் கூறப்படும் வைத்தியர் ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த வைத்தியருக்கு இரவு 10 மணியளவில் தாதி ஒருவரால் பால் தேநீர் வழங்கப்பட்டுள்ளது.

அதனை அருந்திய பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்றபோது மயக்கம் ஏற்பட்டதாகவும் தனக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறிய வைத்தியர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த வைத்தியர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனியாக இருப்பதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.