;
Athirady Tamil News

பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம்- கே.எஸ்.அழகிரி உள்பட 600 காங்கிரசார் மீது வழக்கு!!

0

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரசார் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். சுமார் 600 பேர் வரை திரண்டு மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

கருப்பு சட்டை அணிந்தும் பங்கேற்றிருந்தனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடந்தது. இதையடுத்து அனுமதியின்றி கூடுதல், சென்னை மாநகர் போலீஸ் சட்டம் ஆகிய2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.