;
Athirady Tamil News

ஆந்திராவில் போலீஸ் சித்ரவதையால் வாலிபர் தற்கொலை!!

0

ஆந்திர மாநிலம் சந்தூர் மண்டலத்திற்குட்பட்ட தஸ்கானிகுடம் கிராமத்தை சேர்ந்தவர் சிவன் (வயது 25). இவர் அந்த பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி மைனர் பெண்ணின் தாயார் தஸ்கானிகுடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் அவரை அடித்து மிரட்டி உள்ளனர். மேலும் சித்ரவதை செய்தனர். இதனால் மனமடைந்த சிவன் வீட்டுக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் சிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த வாகனத்தை சிவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். சிவன் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.