;
Athirady Tamil News

உக்ரைன் அருங்காட்சியகம் மீது ரஷ்யா தாக்குதல்: ஒருவர் பலி 10 பேர் காயம்!!

0

உக்ரைன்-ரஷ்யா போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள குபியான்ஸ்க் அருங்காட்சியகத்தின் மீது ரஷ்யா படையினர் நேற்று எஸ்-300 ரக ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், `உக்ரைனின் வரலாறு, கலாசாரம், மக்கள் மீது காட்டுமிரண்டிதனமான தாக்குதல் நடத்தப்படுகிறது. தீவிரவாத நாடு எங்களை முற்றிலும் அழிக்க அனைத்தையும் செய்து வருகிறது,’’ என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ரஷ்யா கைப்பற்றிய குபியான்ஸ்க் பகுதியை உக்ரைன் கடந்தாண்டு செப்டம்பரில் மீட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.