இடமாற்றத்தை ஏற்கவில்லை; அஜித் ரோஹண!!
தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை நிராகரிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேவைத் தேவை காரணமாக ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (SDIG) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று ( 25) அறிவித்திருந்தது.
இதன்படி, அஜித் ரோஹண, உள்ளிட்ட ஏழு பேர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
7 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு உடனடியாக இடமாற்றம் !!