பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி வருகின்றார்.
நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர மாற்று வழியொன்று இல்லை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மாற்று வழியொன்று இல்லாத நிலையில், யாரும் அவ்வாறான வழிமுறையொன்றை முன்வைக்காத போதே, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து இதற்கான அனுமதியை பாராளுமன்றில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனை தற்போது செய்யாவிட்டால் நாட்டின் இளைய தலைமுறையை காட்டிக்கொடுத்தது போலாகும் என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.